Published On Sep 10, 2024
இணையவழி ஊழியர்களுக்கான மத்திய சேமநிதி பங்களிப்புகள் பற்றிய முக்கிய மாற்றங்கள்:
1. ஜனவரி 2025 முதல், இணையவழி ஊழியர்களின் மத்திய சேம நிதி பங்களிப்புகள், ஒவ்வொரு மாதமும் இணையவழி செயற்படுத்துநர்களின் மூலம் சீரான முறையில் செலுத்தப்படும்.
2. 1995 அல்லது அதற்குப் பிறகு பிறந்த இணையவழி ஊழியர்கள் மூன்று மத்திய சேம நிதி கணக்குகளுக்கும் (சாதாரண, சிறப்பு மற்றும் மெடிசேவ்) பங்களிப்பார்கள்.
3. 1995-ஆம் ஆண்டுக்கு முன்னதாகப் பிறந்த இணையவழி ஊழியர்கள் தங்களது மெடிசேவ் கணக்குக்கு மட்டுமே பங்களிப்பார்கள். ஆனால், அவர்கள் விருப்பப்பட்டால் தேர்வு செய்து மத்திய சேம நிதி சேமிப்பை அதிகரிக்கலாம்.
4. சாதாரண, சிறப்புக் கணக்குகளில் கூடுதலான மத்திய சேம நிதி பங்களிப்புகளைச் செலுத்தும் குறைந்த வருமான இணையவழி ஊழியர்கள்கள் ரொக்க உதவி பெறுவார்கள்.
மேல்விவரங்களுக்கு, https://www.cpf.gov.sg/platformworkers இணையத்தளத்தை நாடுங்கள்.