Published On Apr 5, 2023
...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இலவச கல்வி ஆலோசனை முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாரதி கல்வி சேவை மையத்தில் இன்று பனிரெண்டாம் வகுப்பு மேல் பயில இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி ஆலோசனை வழங்கப்பட்டது .
பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கடந்த 3 தேதி நேற்று இறுதி தேர்வில் நடைபெற்றது. பின்பு அந்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், என்ன படித்தால் எதிர்காலத்தில் சிறந்து விளங்கலாம், என்பதை பற்றி கலந்தாய்வு நடை பெற்றது.
அரசிடம் இருந்து பெறப்படும் கல்வி உதவித் தொகை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது . 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் எவ்வாறு மருத்துவம் மட்டும் பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பற்றியும் முதல் தலைமுறை பட்டதாரி யார் யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் 7.5% இட ஒதுக்கீடு எந்த மாணவர்களுக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் ஸ்டெடியூல் கேஸ்ட் மாணவர்களுக்கு எவ்வாறு உதவித் தொகையை பெற வேண்டும் என்பதை விவேகானந்தா சேவை அறக்கட்டளை நிறுவுனர் நாகராஜன் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த ஆலோசனை முகாமில் பாரதி கல்வி சேவை மையத்தின் நிறுவனர் ஆர் டி என் குரு பிரசாத் அவர்கள் தலைமை தாங்கி மாணவ, மாணவிக்கு ஆலோசனை வழங்கினார் .
இவ்விழாவிற்கு மணிகண்டன் அவர்கள் முன்னிலை வகித்தார் இந்த முகாமுக்கு வருகின்ற மாணவர் செல்வங்களை பொன் முகத்தோடு வெண்ணிலா தேவி அவர்கள் வரவேற்று பேசினார்.
,தாஹ் நிஷா , சத்திய, கதிஜ போன்ற ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொன்டனர்.
நன்றியுரை அம்பிகா வழங்கினார்..
முகாமில் 80 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.