Published On Jul 30, 2024
பொன்னமராவதி அருள்மிகு பாலமுருகன் கோவிலில் 700 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
#shortsvideo
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருள்மிகு பாலமுருகன் கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு 700 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று காலை 350 பெண்களும் மாலை 350 பெண்களும் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி பூஜை வழிபாடு செய்தனர். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார்கள் பழனி பாதயாத்திரை குழு நிர்வாகிகள் தலைவர் ஓம் முருகா ஜுவல்லரி முருகேசன், செயலாளர் எஸ் டி. காமராஜ் பொருளாளர் துர்கை ஜுவல்லரி தேனப்பன், நிர்வாகிகள் பாஸ்கர், பொறியாளர் வைரவன், இண்டேன் சதாசிவம், மணிமாறன், ராம்ஜெயம், மல்காஜ் உள்ளிட்ட கோவில் கமிட்டியார்கள் செய்திருந்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.