Published On Jul 25, 2024
பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் - ராசி மண்டல குருபகவான் தலம்
மூலவர்: அகத்தீஸ்வரர்
அம்பாள்: தர்மசவர்த்தினி
தீர்த்தம்: வருண தீர்த்தம்
ஊர்: பூந்தோட்டம்
மாவட்டம்: திருவாரூர்
தலபெருமை
இங்குள்ள தீர்த்தம் வருணனால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, எனவே இதற்கு வருண தீர்த்தம் என்று பெயர். இது ஒரு சிறிய மற்றும் பழமையான கிழக்கு நோக்கிய கோயிலாகும், மேற்கில் நுழைவாயில் உள்ளது. மூலவர் அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அன்னை தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். தட்சிணாமூர்த்தி இங்கு 12 ராசிகளின் மேல் அமர்ந்து ரிஷப வாகனத்தில் கை வைத்து காட்சி தருகிறார். இவர் ராசி மண்டல குருபகவான் என்று அழைக்கப்படுகிறார். எனவே இந்த கோவில் குரு ஸ்தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, நவக்கிரகம், சூரியன், சந்திரன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன.
திருவிழாக்கள்
இக்கோயிலில் தினமும் குரு ஹோரையின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். வியாழன் கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோயில் ஆலங்குடிக்குச் சமமானது என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
பிராத்தனை
இந்த தலத்தில் வழிபட அகத்தில் பிராத்தனை செய்த அனைத்து பிராத்தனை நிறைவேறும். இந்த தலத்தில் உள்ள ராசி மண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் வழிபட சகல விதமான நன்மைகள் கிடைக்கும்.
அமைவிடம்
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் வர பேருந்துகள் உள்ளன.
கோயில் Google Map link
https://maps.app.goo.gl/jSrozAhmecg3s...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 9443672182
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join Our Channel WhatsApp Group
https://chat.whatsapp.com/Gyb8IzlcUdb...
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்