நினைத்த காரியம் வெற்றி பெற அபிராமி அந்தாதி | காரிய சித்தி மந்திரம் | Ninaitha Kariyam Vetri Pera
Aalayam Selveer Aalayam Selveer
1.57M subscribers
133,893 views
1.9K

 Published On May 27, 2020

Ninaitha Kariyam Vetri Pera Manthiram(Ninaitha Kariyam Niraivera Manthiram/Ninaitha Kariyam Nadaka/Kariya Sithi Manthiram).

நினைத்த காரியம் வெற்றி பெற - நினைத்த காரியம் நிறைவேற - நினைத்த காரியம் நிறைவேற மந்திரம் - நினைத்த காரியம் நடக்க மந்திரம் - நினைத்த காரியம் நடக்க - காரிய சித்தி மந்திரம் - காரிய சித்தி மந்திரங்கள்.

முந்தய பதிவுகளில் சொன்ன மாதிரி, முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அன்னையை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல்

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

Aaththaalai, engal abiraamavalliyai, andam ellaam
pooththaalai, maadhulam poo niraththaalai, puvi adangak
kaaththaalai, angusa paasangusamum karumbum angai
serththaalai, mukkanniyai, thozhuvaarkku oru theengu illaiye

அபிராமி அந்தாதி பாடல் பொருள்:

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.

அடுத்து அவரவருக்கு என்ன காரியம் நிறைவேறி வெற்றி அடைய வேண்டுமோ அதை மனதார அன்னையிடம் பிராத்தித்து இந்த மந்திரசக்தி படைத்த பாடலை தினமும் ஜெபித்து வந்தால் வெற்றி நிச்சயம்.

நினைத்த காரியம் நிறைவேற - அபிராமி அந்தாதி 25 வது பாடல்

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

Pinne thirindhu un adiyaaraip peni pirapparukka,
munne thavangal muyandru konden mudhal moovarukkum
anne ulagukku abiraami ennum arumarundhe
enne ini unnaiyaan maravaamal ninru eththuvane.

அபிராமி அந்தாதி பாடல் பொருள்:

முதன்மை பெற்றவர்களான மும்மூர்த்திகளுக்கும் அன்னையான அபிராமித் தாயே! என்றைக்கும் நிலையான அழகும் அருளும் கொண்டு உலகத் துன்பங்களையெல்லாம் போக்கவல்ல அரிய மருந்தானவளே! பிறவா நிலை அடைய எத்தனையோ பிறவிகளாக உன்னை நினைந்தும் உன் அடியவர்களுக்குப் பணி செய்தும் வர எனக்கு அருள் செய்த என் தாயே! என்னே உன் பெருமைகள், இப்பொழுது மட்டுமல்ல, இனி என்றைக்குமே உன்னை நான் மறவாமல் என் நெஞ்சில் நிறுத்திப் போற்றுவேன்.

அன்பர்கள் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த காரிய சித்தி பாடலை 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் நினைத்த காரியம் எதுவானாலும் கட்டாயம் வெற்றி பெரும்.

#aalayamselveer #abiramianthathi #kariyasithi

show more

Share/Embed